லண்டனிலிருந்து யாழ் வந்தவர் மாரடைப்பில் பலி

லண்டனில் இருந்து யாழ் வந்த 57 வயதுடையவர் மாரடைப்பில் மரணம்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் உள்ள
உறவுகளை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
திடீர் இறப்பு குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.