தமிழ்நாட்டில் ஈழத் தமிழரை ஒருவரை காணவில்லை!- மனைவி முறைப்பாடு

இந்தியாவின் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் அகதிகள் முகாமில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் இலங்கையர் ஒருவரையும் காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமது கணவர் காணாமல் போனமை தொடர்பில் அவரின் மனைவி முறைப்பாட்டை செய்துள்ளார்.

தமது கணவர், பாம்பன் பிரதேசத்துக்கு நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றபின்னர் காணாமல் போயுள்ளதாக மனைவி முறையிட்டுள்ளார்.
40 வயதான சிவரூபன் என்பவரே செப்டம்பர் 24ஆம் திகதியன்று காணாமல் போயுள்ளார். எனினும் தாம் இது தொடர்பில் முறைப்பாட்டை ஒக்டோபர் 10ஆம் திகதி செய்த போது அதனை பொலிஸார் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தநிலையில் ஒக்டோபர் 6ஆம் திகதியன்று சிவரூபன் தமது மனைவிக்கு காணாமல் போனதாக கூறப்படும் அவருடைய மூன்று நண்பர்களில் ஒருவரான ரஹ்மானின் தொலைபேசியில் இருந்து அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
எனினும் மனைவியான புஸ்பராணி மீண்டும் அந்த அழைப்புடன் தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.