முறிகண்டி ஊடான பல வீதிகள் போக்குவரத்துத் தடை

அக்கராயன் குளம் வான்பாய ஆரம்பித்திருப்பதனால் முறிகண்டி ஊடாக பல பிரதேசங்களுக்கான பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அக்கராயன், முழங்காவில், ஜெயபுரம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுடாகச் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாதையூடாகவே அக்கராயன் மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் அப்பிராந்திய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தொடரும் கன மழை காரணமாக விசுவமடு, புண்ணைநீராவி, நாதன் திட்டம், உழவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து, விசுவமடு தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தொடரும் கன மழையின் காரணமாக இன்றும் இரணைமடு குளத்தின் வான்கதவுகள்; 4 அடிவரை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.