தந்தையை கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்த மகன்?

இரத்தினபுரி, தெல்கொட, தெம்பிலிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் இருபது நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் பின்பக்கம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்த, எந்தான பிரதேசத்தைச் சேர்ந்த மணிமுத்து சுப்பிரமணியம் எனும் 54 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் காலத்துக்குக் காலம் தனது ஐந்து பிள்ளைகளின் வீடுகளிலும் மாறி மாறித் தங்கி வந்தார் எனவும், கைதுசெய்யப்பட்ட மகனது வீட்டில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது என்றும் பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இரத்தினபுரி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கலவான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித அபேசிங்கவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.