இடி மின்னல் தாக்கி பரிதாபகரமாக இறந்த மாடு

இன்று காலை பெய்த கன மழை காரணமாக இடி மின்னல் தாக்கியதில் ஐம்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான கன்று தாச்சி மாடு பரிதாபகரமான முறையில் இறந்துள்ளது.
மல்லாகம் நீலியம்பனை பிள்ளையார்
ஆலயத்திற்க்கு அருகாமையில் உள்ள வயல் வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த பசுமாடே இடி மின்னல் தாக்கியதில் பலியானதாகும்.
பசுமாடு இறந்து வயல் வெளியைச் சுற்றி நெருக்கமாக குடிமனைகள் இருக்கின்ற போதிலும் இடி மின்னல் தாக்கம் எற்பட்ட வேளையில் தெய்வாதீனமாக அந்தப் பகுதியில் உள்ள குடிமனைகள் எவையும் தாக்கத்திற்க்கு உள்ளாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.