இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் ஒருவர் கைது

வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
விஸ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு
பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு குறித்த கிராம சேவகரால் 25,000 ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது. 
அதன்படி குறித்த கிராம சேவகர் இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்டவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளளார்