திருகோணமலையில் இன்று அதிகாலை ஒருவர் சுட்டுக் கொலை!

திருகோணமலை தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் இன்று (08) அதிகாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்மீது இன்று (08) அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட 25 வயதானவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.