யாழ்.ஓட்டுமடம் பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இருவர் படுகாயம்

யாழ்.ஓட்டுமடம் பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் இடத்தில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றைய தினம் மதியம் குறித்த வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெ.பத்மயெகன்,
எஸ்.சுரேஷ் என்ற இரு குடும்பஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் வெடி பொருளை அடித்து நசிக்க முயன்ற வேளை அது வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.