வாரிக்குட்டியூரில் அதிஉயர ஐயனார் விக்கிரகம்

வவுனியா வாரிக்குட்டியூர் 06ம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையிலேயே அதிஉயரத்தை உடைய (27 அடி) ஐயனார் விக்கிரகத்துக்கு கும்பாவிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா 07.09.2015 இன்று நடத்தப்பட்டது.

சிவஸ்ரீ பால கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்துகொண்ட,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரம் ரகு, இவர்களுடன் வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய பரிபாலனசபையினரும், வாரிக்குட்டியூர் கிராம மக்களும் இணைந்து சிற்பாசிரியர்களை கௌரவித்தனர்.