சுன்னாகத்தில் பெண்ணின் தாலிக் கொடியை அறுத்துச் சென்ற இளைஞர்கள்

மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் மிகவும் துணிச்சலான முறையில் வீதியில் சென்ற பெண்ணின் தாலிக் கொடியையும் சங்கிலியையும் அறுத்து சென்ற சம்பவம் சுன்னாகம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நகைகளின் பெறுமதி சுமார் மூன்று லட்சம் ரூபாவுக்கு மேல் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள ஒழுங்கையில் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. 
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறிப்பிட்ட பெண்ணின் கழுத்தில் உள்ள நகைகளை அறுக்க முற்பட்ட நிலையில் அவர் அதனை எதிர்த்து நின்றுள்ளார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி, குறித்த பெண்ணைப் பிடித்து அவருடைய கழுத்தில் உள்ள சங்கிலி மற்றும் தாலிக் கொடியையும் அறுத்து சென்றுள்ளார்கள்.
அதே இடத்தைச் திருமதி சேர்ந்த திருமதி சுபாசினி பிரதீபன் (வயது 32) என்பவரின் நகைகளே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்ணால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த இழுபறியினபோது பெண்ணினுடைய கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது