அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஆறு இலங்கையர்கள் இந்தியாவில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் இந்திய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சின்
காவற்துறையினரால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
கேரளாவின் முன்னம்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து இவர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் மேலும் 4 இந்திய முகவர்களையும் கொச்சின் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.