திருநெல்வேலி சிவன் வீதியில் மரம் விழுந்த மூன்று கடைகள் சேதம்

திருநெல்வேலி சிவன் வீதியில் சிவன் அம்மன் கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள சுமார் இருநூறு வருடங்களுக்கு முந்திய அரச மரத்தின் பாரியகிளை திடீரென முறிந்து வீழ்ந்தமையால் மூன்று கடைகள் சேதம் அடைந்துள்ளதுடன்
போக்குவரத்தும் பாதித்துள்ளது.
நேற்றிரவு குறிப்பிட்ட மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. வீதியில் வீழ்ந்துள்ள போதிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை என்ற வகையில் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டமையால் பொது மக்கள் மற்றும் வாகனங்களுக்கும் எநத வகையான சேதங்களும் ஏற்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.