மிருசுவில் பகுதியில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

மிருசுவில் பகுதியில் காணி துப்புரவாக்கும் போது ஆர்.பி.ஜி மோட்டார் குண்டும்,கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர் தனது காணியை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும் போதே இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே காணியிலிருந்து குறித்த குண்டுகள் அப்புறப்படுத்த முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.