மட்டக்களப்பு பகுதுஇயில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

இன்று மாலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை மாலை வேளையில் பெய்துகொண்டிருந்தது.
அதன்போது அம்பாறை சம்மாந்துறையில் 58 வயது
மதிக்கத்தக்க அலியார் முகம்மது இப்ராகீம் என்பவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உடனடியாகவே மரணமடைந்துள்ளார்.
மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததுடன், பல இடங்களில் சுழல் காற்றும் வீசியதால் சில இடங்களில் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.