யாழ். ஆவரங்காலில் கோர விபத்து: 32பேர் காயம்

இன்றைய தினம் காலை புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந் துள்ளனர். எனினும் உயிரிழப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
.
இன்றைய தினம் காலை 10.45 மணியளவில் பயணிகள் பேருந்தும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாது.
இந்நிலையில் பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில் 21 பேர் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும். சிலர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்கு உயிர் இழப்புக்கள் எவையும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது கிடைத்த தகவலின் படி காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ள நிலையில் அச்சுவேலி, கோப்பாய் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களும் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வைத்திய அதிகாரி எஸ்.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
இதன்படி 3 சிறார்கள் உட்பட  11ஆண்களும், 21 பெண்களுமாக 32 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.