ஒரே நாளில்,ஒரே மருத்துவமனையில் குழந்தை பெற்ற 3 சகோதரிகள்

அயர்லாந்தில் உள்ள மயோ பகுதியில் உள்ள கேஸ்டில்பார் நகரை சேர்ந்த ஒன்று விட்ட சகோதரிகள் மைரெட் பிட்ஷ்பட்ரிக், ஜோலின் காட்பிரே, பெர்னி வார்டு. இவர்கள் அனைவரும்
கேஸ்டில்பாரில் உள்ள மயோ பொது மருத்துவமனையில் பிறந்தவர்கள்.
இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்கள் கர்ப்பமாக இருந்தனர். பிரசவ வலி ஏற்பட்டதால் அவர்கள் பிறந்த மயோ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இங்கு சகோதரிகள் 3 பேருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறந்தது. முதலில் மைரெட் பிட்ஷ்பட்ரிக்ருக்கு தாமஸ் ஒக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஜோஸ்லின் காட்பிரேவுக்கு சோர்சா என்ற பெண் குழந்தையும், மற்றொரு சகோதரி பெர்னிவார்டுக்கு பெலிம் என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
இவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் பிரசவம் நடைபெறும் என டாக்டர்கள் கணித்திருந்தனர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக 3 பேருக்கும் ஒரே நாளில் அதே ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறந்து அதிசயத்தில் ஆழ்த்தினர்.
குழந்தைகள் அனைவரும் நலத்துடனும், சுறுசுறுப்புடன் இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இவர்களது 4–வது சகோதரி கிறிஷ்னா முர்ரேயும் கர்ப்பிணியாக உள்ளார். தற்போது இவரும் பிரசவத்துக்காக இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்