விநாயகர் சதுர்த்தி !- 28 அடி உயர கரும்பு விநாயகர்

இன்று விநாயகர் சதுர்த்தி விரதம் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதி நண்பர்கள் குழு சார்பில் கொளத்தூர் மூகாம்பிகை பஸ் நிலையத்தில் கரும்பினால் ஆன 28 அடி உயர சித்தி
விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
20 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்களாக 2 டன் கரும்பை கொண்டு இதை வடிவமைத்துள்ளனர்.
இந்த விநாயகரை வடிவமைக்க ரூ.1 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு 4 நாட்கள் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.