சுவிட்சர்லாந்து சாலையில் கோர விபத்து இரண்டு குழந்தைகள் பரிதாபமாக மரணம்

சுவிட்சர்லாந்து சாலையில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுவிஸின் Schwyz மண்டலத்தில் உள்ள Goldau என்ற
பகுதி சாலையில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் A4 சாலையில் சரக்கு லொறி ஒன்று பயணித்துள்ளது. அப்போது, அந்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக வாகனத்தை ஓட்டுனர் சாலையிலேயே நிறுத்தியுள்ளார்.
இதனை அறியாமல் கார் ஒன்றில் அதிவேகத்தில் வந்த பெண் ஓட்டுனர் அந்த லொறி மீது பயங்கரமாக மோதியுள்ளார்.
பலத்த காயமடைந்த நிலையில் காரை விட்டு தவழ்ந்து வெளியே வந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு கார் விபத்துக்குள்ளான கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் பயணித்த 2 மற்றும் 3 வயது பெண் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரேகா மீட்புக்குழுவினர் இரண்டு ஹெலிகாப்டர்களுடன் அங்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு குழந்தை உள்பட இரண்டு பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து சாலையின் இரு வழிகளையும் போக்குவரத்து பொலிசார் தற்காலிகமாக முடக்கினர்.
இரண்டு பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.