வவுனியாவில் துணிகர கொள்ளை

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து கத்தி முனையில் துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, கோவில்புதுக்குளம், 10ஆம்
ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் பின் பகுதி வேலி ஊடாக அதிகாலை 1.30 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மறைத்தபடி உள்நுழைந்த மூவர் கதவைத் தட்டி திறக்குமாறு கோரியுள்ளனர். அச்சமடைந்த வீட்டு உரிமையாளர் கதவை திறக்காது இருந்துள்ளார்.
இதன்போது கூரிய ஆயுதத்தால் கதவை உடைத்தவாறு உள்நுழைந்த கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற அரச உத்தியோகத்தரான வீட்டு உரிமையாரை தாக்கி கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு வீட்டில் இருந்த 50,000 ஆயிரம் ரூபாய் பணத்தையும், மனைவியின் கையில் அணிந்திருந்த காப்பு உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.