இன்று ஆடி அமாவசை கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்ற திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலையில் இன்று  ஆடி அமாவசையையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் விரதமிருந்து தமது உறவுகளுக்கு  பிதிர்க்கடன் நிறைவேற்றினார்கள்.

கீரிமலைக் கேணியிலும், கடலிலும் நீராடி தமது இறந்த உறவுகளை நினைத்து பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.  இம்முறை என்றுமில்லாதவாறு புலம்பெயர் உறவுகளும்  அதிகளவாக திரண்டு தமது உறவுகளுக்கு பிதிர்க் கடன் நிறைவேற்றினர்.
கடலில் எந்த வகையான ஆபத்துக்களும் ஏற்படா வண்ணம் கடற்படையினரும், வெளியில்  காங்கேசன்துறைப் பொலிஸாரும், சாரணர் – சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் இயக்கங்களும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.