யாழினில் 80 நாளினில் 48 பேர் மரணம்!

யுத்தத்தின் பின்னராக விபத்துக்களினில் உயிர்கள் தமிழர் தாயகத்தினில் காவு கொள்ளப்படும் நிலையினில் யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையிலும்
700 பேர் தலை அடிபட்டுப் பாதித்த நிலையிலும் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து 6 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்றவுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 36 பேரும், ஏனைய சிகிச்சை விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேருமாகவே 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.