யாழ். சாவகச்சேரியில் மோட்டார் குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, சங்கத்தானை முருகன்கோவில் பகுதியிலுள்ள சிறு வீதி ஒன்றில் புதைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று
பிற்பகலில் குறித்த மோட்டார் குண்டை மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாக சங்கத்தானைப் பகுதி காணப்படுகிறது.
அக்காலப் பகுதியில் பரஸ்பரம் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
அவற்றில் ஏதாவது ஒரு குண்டே வெடிக்காமல் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.