மட்டக்களப்பு பகுதியில் மின்னொழுக்கால் வீடு சேதம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்கு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மகிழுர் முனைக் கிராமத்தில் திங்கட்கிழமை 27 மாலை மின்னொழுக்கின் காரணமாக தகரத்திலான வீடொன்று முற்றாக தீக்கரையாகியுள்ளது
தெரியவருகிறது

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் பிராமணர் வீதியில் வசிக்கும் சகாயராசா மேரி என்ற பெண்ணின் வீடே மின் ஒழுக்கினால் சேதமாகியுள்ளது இவர்கள் வீட்டிற்குவெளியில் இருக்கும் போதே திடிரென மின்ஒழுக்கு ஏற்பட்டு வீடு எரிந்ததாகவும் பின்னர் மின்சாரசபை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் ஸ்தலத்திற்க வருகைந்து மின்சாரத்தை துண்டித்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்ததுடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது

.