கொச்சி விமான நிலையத்தில் ரூ.32 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற, தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து நேற்று காலை கொச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க
இலாகா அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் சூட்கேசில், 16 கிலோ எடையுள்ள எபிடின் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.32 கோடியாகும். இவர் டெல்லியில் இருந்து ெகாச்சி வழியாக தென்ஆப்பிரிக்காவுக்கு போதைப் பொருளை கடத்த திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவரை சுங்க இலாகா அதிகாரிகள் கொச்சி போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.
இலாகா அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் சூட்கேசில், 16 கிலோ எடையுள்ள எபிடின் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.32 கோடியாகும். இவர் டெல்லியில் இருந்து ெகாச்சி வழியாக தென்ஆப்பிரிக்காவுக்கு போதைப் பொருளை கடத்த திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவரை சுங்க இலாகா அதிகாரிகள் கொச்சி போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.