யாழ்.நகர ஆர்ப்பாட்டம் கொக்குவிலில் நடந்தது!

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையினில் ஏறகனவே அறிவிக்கப்பட்ட போராட்டம் கொக்குவில் பகுதியில் நடைபெற்றுள்ளது.கொக்குவிலில் உள்ள தேசிய கலை இலக்கிய பேரவையினில் திரண்ட அதன் உறுப்பினர்கள்; மற்றும் ஆதவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி மற்றும் பெண்விடுதலை சிந்தனை அமைப்பினது பிரதிநிதிகளே ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.பெண்களுக்கான பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்குவோமென்பதை மைய கருத்தாக முன்னிறுத்தும் பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.
 முன்னதாக யாழ்.நகரில் குறித்த அமைப்புக்களினால் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த போராட்டத்திற்கு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன் எதிர்வரும் 14 நாள்களுக்கு எந்த அமைப்பும் யாழ். நகரத்தில் போராட்டங்களோ ஒன்றுகூடல்களையோ மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்திருந்தது.