இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா(படங்கள் இணைப்பு)

நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இன்று 02.05.2015 சனிக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது விநாயகப்பெருமான், பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமான் ஆகியோர் மூன்று சித்திரத் தேர்களில் உலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர்.

.
சித்திராப் பூரணையை நிறைவு நாளாகக் கொண்டு நீர்வேலி கந்தனுக்கு 19 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழமை. நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. ...
.
1830 ஆம் ஆண்டில் சிவசங்கரபண்டிதரால் கந்தபுராண படனம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் இவ்வாலயத்திற்குப் பெருமையானது