யுத்தத்தில் இறந்தவர்களின் உடலுக்கு பிதிர்க்கடன்களைச் செலுத்திய உறவினர்கள்

யுத்தத்தில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு சமய வழிபாடுகள் மூலமாக அவர்களின் ஆத்மசாந்திக்காக இன்று 17.05.2015 காலை 10.30 மணியளவில் ஈழத்தின் புனித தீர்த்தக்கரையான கீரிமலை புனித தீர்த்தக்கரையோரத்தில்
இறந்தவர்களின் பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதர சகோதரிகள் ஒன்றிணைந்து இறந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய பிதிர்க்கடன்களைச் செய்தார்கள்.
இன் நிகழ்வு முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நயகம் தலமையில் இடம் பெற்றதுடன் இன் நிகழ்விற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உறவுகள் கலந்து கொண்டதுடன் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்தார்கள்.