மல்லாகத்தில் வாள் வெட்டு பாடசாலை மாணவன் படுகாயம்

மல்லாகத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழு
மாணவனின் வீட்டுக்குள் நுழைந்தே அவரை வெட்டிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்பவரே தலையில் பலத்த காயமடைந்தார். இதேவேளை மல்லாகம், சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக தினமும் இளைஞர் குழுக்கள் மோதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்றது.தவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் போதுமனாளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனாலேயே இவ்வாறான மோதல்கள் அதிகரிக்கின்றன என்றும் மக்கள் தெரிவித்தனர்.