கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞர்கள் இருவர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர்களே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற போதே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போதே இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்யப்பட்டுள்ளனர்.
போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற போதே அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போதே இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.