யாழ்.ஊரெழு பகுதியில் 4 பரல் ஆயுதங்கள் மீட்பு

யாழ்.ஊரெழு கணேசா வித்தியாசாலைக்கு அண்மையில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களால் அத்திவாரம் வெட்டும் பொழுது ஆயுதங்கள் அடங்கிய 4 பிளாஸ்ரிக் பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர்.
மேலும் மீட்ட ஒரு பரலை  திறந்து பார்த்தபொழுது கைக்குண்டுகள் மற்றும் 1986 9,4 மூட்டை கிறிஸ்,கணக்கு வழக்குகள் என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றும்  காணப்பட்டது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.