யாழ். கொடிகாமத்தில் வாகனம் மோதி ஒருவர் பலி

பஸ்ஸின் பின்புறமாக வீதியைக் கடக்க முயன்றவரை மறுகரையால் வேகமாக வந்த வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடிகாமம் ஏ – 9 வீதியில் இடம்பெற்றது.

இயற்றாலையைச் சேர்ந்த முருகதாஸ் அழகேஸ்வரன் (வயது – 34) என்பவரே உயிரிழந்தார்.
இவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.