லண்டனில் காந்தி சிலையைத் திறந்து வைத்த டேவிட் கேமரூன்

லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை பிரதமர் டேவிட் கேமரூன் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, நடிகர் அமிதாப் பச்சன் ,காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் இங்கிலாந்தில்
வாழும் இந்திய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பிய 100 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.