லண்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வீணலயா நிகழ்வு

லண்டனில்  வீணலயா நிகழ்வு நேற்று  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் £7000.00 (பதினைந்து இலட்சம் இலங்கை ரூபாய்) நிதி திரட்டப்பட்டது. இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது
மனமார்ந்த நன்றிகள். இந் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்கானமுக்கியகாரணம்
எமது கிராமத்தின் வளர்ச்சி பற்றிய கரிசனையே ஆகும். அதுமட்டுமன்றி ஒற்றுமையாக ஒன்றுபட்ட எண்ணத்துடன் எல்லோரும் செயற்பட்டால் இது போன்று பல ஆக்கபூர்வமான நிகழ்வுகளையும் நற்பணிகளையும் முன்னெடுக்கலாம் என்பதற்கு இந்நிகழ்வு சான்றாக அமைந்துள்ளது.