பீதியுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும்.ஏழாலை பகுதி மக்கள்

வலிகாமம் ஏழாலைப் பகுதியில் பாடசாலைக் குடிநீர்த் தாங்கியில் நஞ்சேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அச்சத்துடன் காணப்படுகின்றனர். வலிகாமம் பகுதி மக்களுக்கென விசேடமாக
அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தாங்கிகளில் நீரைப் பெற்றுக் கொள்ளும் ஏழாலை பகுதி மக்களே இவ்வாறு பீதியுடன் குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தாம் பெற்றுக் கொள்ளும் குடிநீர்த் தாங்கியிலும் ஏதேனும் நஞ்சுத் திரவம் கலந்திருக்கின்றதோ என தினமும் அச்சத்துடனே நீரைப் பெற்றுக் கொள்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாடசாலை நீர் தொட்டியில் நஞ்சேற்றியவர்கள் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.