பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்.மானிப்பாய் பகுதி அதிர்ச்சியில்

பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் மானிப்பாய் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கற்றுவரும் மாணவி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காணாமல் போயிருந்தார்.

பாடசாலையில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த மாணவியை அவரது ஒன்று விட்ட சகோதரன் ஒருவர் ஓட்டோவில் அழைத்துச் சென்றிருந்தார் என்றும், இதன்பின்னர் மாணவி குறித்த தகவல் எதுவும் தெரியாத நிலை காணப்பட்டதாவும் கூறிப்பட்டது.
இந்நிலையில் குறித்த மாணவி மயக்கமடைந்து அநாதரவாக யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையான வீதியில் கிடந்துள்ளார். அநாதரவாகக் கிடந்த மாணவியை அப்பகுதிக்கு சென்றவர்கள் கண்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
வைத்திய பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரிய வந்தது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.