இந்தியாவில் பன்றிக்காய்ச்சல்! 1041 பேர் பலி: 19 ஆயிரம் பேர் பாதிப்பு

பன்றிக் காய்ச்சல் காரணமாக, நேற்று மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 1041 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,046 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மாநில வாரியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம்:
ராஜஸ்தானில் 257, குஜராத்தில் 256, மத்தியப் பிரதேசத்தில் 151, மராட்டியத்தில் 131, தெலுங்கானாவில் 56,, கர்நாடக மற்றும் பஞ்சாப் தலா 42, அரியானா 21, ஆந்திராவில் 12, தில்லியில் 10, தமிழகத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக, மக்களவை நேற்று விளக்கம் அளித்த மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, இதுவரை 18, 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை.
நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என கூறியுள்ளார்.