கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:-
வவுனியா, ஓமந்தை பறைநாட்டாங்கல் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை யாழப்பாணத்திலிருந்து சென்ற ரயில் மோதித்தள்ளியதில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிள் சுக்குறநூறாகியது.
இந்தச் சம்பவத்தில் ஓமந்தை அரசமுறிப்புக் குளத்தைச் சேர்ந்த கந்தசாமி திருக்குமரன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பாதுகாப்புக் கடவையின் காவலாளி பாதுகாப்புக் கடவையை மூடாதமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.