யாழ். பருத்தித்துறையில் வீட்டின் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து கஞ்சாப் பொதி மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பாடசாலை ஒன்றின் முன்பாக உள்ள வீட்டின் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து 19.8 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு மறைத்து
வைக்கப்பட்ட நிலையிலேயே இந்த இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நுவான் பி.டந்தநாராயண தெரிவித்தார்.
குறித்த இடத்தில் கஞ்சா பொதியிருப்பதை அவதானித்த இராணுவத்தினரே அதனை மீட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.