கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதன்படி இலங்கையிலிருந்து 3500 இற்கும்
மேற்பட்ட பக்தர்களும், தமிழகத்திலிருந்து 4000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிகாட்டுவானில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் விசேட படகுகளில் பக்தர்கள் இன்று காலை முதலே புறப்பட்டுச் செல்கின்றனர். இதேபோன்று தமிழகத்திலிருந்தும் பலர் இன்று தமது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
கச்சதீவு பெருவிழா இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமானது.