கோண்டாவில் பகுதியில் சட்ட விரோதமாக தனக்குத் தானே கருக்கலைப்பு. ஒருவர்கைது

சட்ட விரோதமாக தனக்குத் தானே கருக்கலைப்பு செய்து இறந்து பிறந்த சிசுவை வீட்டு வளவுக்குள் புதைத்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கோண்டாவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

26 வயதான குறித்த பெண் மூன்று வருடங்களுக்கு முன்னரே தனது கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இந்நிலையிலேயே அவர் கர்ப்பமடைந்துள்ளார்.
ஆனால் கர்ப்பம் எனத் தெரியாத குறித்த பெண் வயிறு வீக்கத்துக்காக மருத்துவப் பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதன்போதே அவர் கர்ப்பவதி என்பது உறுதியானது. இதனாலேயே அவர் தனக்குத் தானே கருக்கலைப்பு செய்து பிறந்த சிசுவை வீட்டு வளவுக்குள் புதைத்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி சுகாதாரப் பிரிவினருக்குத் தெரிய வரவே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் குறித்த பெண் கோப்பாய் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.