யாழ். மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்

ஏ9 வீதி மீசாலை, ஐயாகடையடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
லான்ட்மாஸ்டருடன் ஹைஏஸ் வாகனம் மோதியதில் லான்ட்மாஸ்டர் சாரதியும் வானில் பயணித்த இருவரும் காயமடைந்தனர்
.
லான்ட்மாஸ்டரும் ஹைஏஸ் வானும் பலத்த சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் மூவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடுவில் தெற்கைச் சேர்ந்தவர்களான வரராஜன் சாந்தகுமார் (வயது 45), மகாலிங்கம் விநாயமூர்த்தி (வயது 34), மீசாலை வடக்கைச் சேர்ந்த பவளேந்திரன் கஜதீபன் (வயது 34) ஆகியோரே காயமடைந்தனர்.