யாழ்.சுழிபுரத்தில் கள்ளுத் தவறணையை அடித்து நொறுக்கிய மக்கள்

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கள்ளு விற்பனை நிலையம் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது.
மேலும் இதுசம்பந்தமாக கடந்த கிழமைகளில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தி
தவறணையை எடுக்க கோரிக்கை விடுத்து சுழிபுரம் பிரதேச சபை தவிசாளர் முன்னிலையில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார்கள்.
அது சம்பந்தமாக வடமாகாண சபை முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
சனிகிழமை இரவு தவறணைக்கு முன்னால் உள்ள வேலி எரிக்கப்பட்டதாலே ஆவேசம் அடைந்த மக்கள் தவறணையை உடைத்ததாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இதுசம்பந்தமாக வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்